தண்டையார்பேட்டை: ஆந்திர மாநில பகுதியில் மீன் பிடித்தபோது படகில் தீவிபத்து ஏற்பட்டதால், நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த 15ம் தேதி முடிந்தது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக மீனவர்கள் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 24ம் தேதி புது வண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கைலேஷ்குமார் தலைமையில் கேசவராவ், சரவணகுமார், துளசி, சிவாஜி, யுஜிராவ், லோகேஷ், யோகபெருமாள் உட்பட 9 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள், ஆந்திர மாநிலம் கிருணாம்பட்டினம் அருகே நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.