திருவனந்தபுரம்: லட்சத்தீவு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா சுல்தானாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசின் நிர்வாக அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது, கேரளாவில் உள்ள கவரத்தி போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே 3 முறை போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். நேற்று முன்தினம் 4வது முறையாக போலீசார் விசாரணைக்கு அவர் ஆஜரானார். பல மணி நேர விசார ணைக்குப் பிறகு செல்போனை பறிமுதல் செய்து விட்டு, போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.