திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக 2 மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதில் ஒன்று குண்டுகள் வெடிப்பு தொடர்பாக குற்றங்களை கண்டுபிடிக்கவும், மற்றொன்று கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த காவேரி என்ற 6 வயது மோப்ப நாய்க்கு நேற்றுமுன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.