மும்பை: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் தொடங்குகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி: நியூசிலாந்து இங்கிலாந்தின் சீதோஷண நிலைமைகளை விரைவாக சரி செய்யும். ஆனால் கடைசியாக இரு அணியினரும் மோதிய தொடரில், இந்தியாவை சொந்த மண்ணில் நியூசிலாந்து வீழ்த்திய போதிலும், சவுத்தாம்ப்டனில் இந்தியாவை அவர்கள் வீழ்த்த நல்ல தரமான கிரிக்கெட் விளையாட வேண்டியிருக்கும்.