தமிழகம் ஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்!: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..!! Jun 15, 2021 ஆதார் டாஸ்மாக் ஸ்டால்கள் திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டுவருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் குடையோடு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் உடுமலை, மடத்தகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குடையுடன் வரும் நபர்களுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவிலான மதுபாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திண்டுக்கல் புறநகர் பகுதியான ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கரையில் ஆதார் மற்றும் குடை கொண்டுவருவோருக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசியுள்ளார்: தயாநிதிமாறன் பேட்டி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு..!!
தேர்தலை முன்னிட்டு நேற்று இயக்கப்பட்ட 2,899 பேருந்துகள் மூலம் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்: போக்குவரத்துக்கழகம் தகவல்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்
வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்; சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்: கவிஞர் வைரமுத்து பதிவு
சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல்..!!
பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு மோசடி; ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் தஞ்சையில் அதிரடி கைது: பாஜவை சேர்ந்த மற்றோருவருக்கு வலை