சின்னசேலம் : கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலையடிவாரத்தில் காரில் கள்ளச்சாராயம் கடத்துவதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோமுகி அணை வளாக பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன்மலையடிவாரத்தில் இருந்து அதிவேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். மேலும் காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கல்பொடை கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ராமர்(47), கல்பொடையை சேர்ந்த பார்த்திபன்(30), தாழ்மதூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா(31) என்பது தெரிந்தது. பின்னர் காரில் சோதனை நடத்தியபோது 7 லாரி டியூப்களில் 150 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.