கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி போட வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: கொரோனாவை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம்  தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல்வேறு முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: