புதுடெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து அமித்ஷா, பாஜ தலைவர் நாட்டாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது, தடுப்பூசி போடுவதில் குளறுபடி உட்பட பல்வேறு செயல்பாடுகளால் மத்திய அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை சமாளிக்கவும், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வின் வெற்றியை உறுதிப்படுத்தவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக, மத்திய அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களை சேர்த்து பலமாக்க திட்டமிட்டு உள்ளார். தற்போது, மத்திய அமைச்சரவையில் 53 பேர் உள்ளனர்.