புதுடெல்லி: நைஜீரிய அரசு டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் ‘கூ’ செயலியை தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக நைஜீரிய அதிபர் முகமது புஹாரி டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதனை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதனால், டுவிட்டர் பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாகக் கூறி நைஜீரியாவில் டுவிட்டர் பயன்பாடுகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதையடுத்து பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘கூ’ செயலியின் பயன்பாட்டை, நைஜீரியா அரசு அங்கீகரித்துள்ளது.