புதுடெல்லி: ஓராண்டுக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கூட்டம் நேற்று காணொலி மூலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: எப்போது எல்லாம் மனித இனம் துன்பப்படுகிறதோ, அப்போது எல்லாம் ஒரு புதிய பாதையை அறிவியல் அமைத்து கொடுக்கும். அறிவியலின் இந்த பங்களிப்பு தற்போது இந்தியாவிலும், உலகமெங்கும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் சவாலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால், வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள்ளேயே நம் விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கினர்.