திருச்சி: திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து 2 நாளில் தெரிவிக்கப்படும். இ-மெயில் முகவரியில் கருத்துகளை தெரிவிக்கலாம். இதையெல்லாம் ஆலோசித்து சென்னையில் நாளை (இன்று) மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சிஇஓ), மாவட்ட கல்வி அலுவலர்கள் (டிஇஓ) கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.