பீகாரில் லாலு கட்சி எம்பி நிதி மோசடி வழக்கில் கைது

புதுடெல்லி: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர் அமரேந்திர சிங். தொழிலதிபரான இவர் அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி.யாகவும் இருக்கிறார். இவர் உர ஊழலில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாச்க கடந்த மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்தது. அதில், மோசடி செய்தது உறுதியானதால் நேற்று அவரை அமலாக்கப் பிரிவு கைது செய்தது.

Related Stories: