தமிழகம் வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை!: விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி..!! Jun 03, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஈரோடு: வெப்பச் சலனம் காரணமாக ஈரோடு, அந்தியூர், திண்டுக்கல் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உஷ்ணம் நிலவி வந்த நிலையில், புதுமாரியம்மன் கோவில், வட்டக்காடு, புதுப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் குளிர்ச்சி நிலவி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 மணி நேரமாக கனமழை கொட்டியது. காவேரி நகர், சின்னப்பநாயக்கன் பாளையம், தட்டாங்குட்டை, உடையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவு 7 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தால் சாலையில் கிடந்த மண் அந்த வழியாக செல்வோர் மீது வீசி அடித்தது. சூறாவளி காற்றின் பெருத்த ஆரவாரத்தை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில் வடிகாலுக்காக வெட்டப்பட்ட கால்வாயில் மழைநீர் தேங்கியது. குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று திண்டுக்கல் சுற்றுவட்டாரத்திலும் 2வது நாளாக சுமார் 1 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வெயில் வாட்டி வந்த நிலையில், சின்னாளப்பட்டி, ராஜக்காப்பட்டி, செம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதை அடுத்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சாய்னார்பட்டி சுற்றுவட்டாரத்தில் ரெட்டியபட்டி, நொச்சி ஓடயப்பட்டி, விராலிப்பட்டி, தவசிமேடை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கொட்டிய மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்: 7டன் எடை கொண்ட அம்மன் தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி!!
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!