சென்னை :இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் நெறியின் பெட்டகமாக வாழ்ந்து, தமிழ் இனத்திற்கு தனது உணர்வாலும், உள்ளத்தாலும், பகுத்தறிவாலும், கரையில்லா அவரின் பட்டறிவாலும் காலமெல்லாம் பணியாற்றியிருக்கிறார். அவரின் பிறந்த நாளில் கலைஞர் ஆற்றிய தொண்டுகளும், அவரின் வரலாற்றுச் சாதனை பட்டியலும் நம் அனைவரின் வாழ்வுக்கு தூண்டுகோலாகவும், ஊன்றுகோலாகவும் என்றும் திகழும். கலைஞரின் வழிநின்று தமிழகத்திற்கு நல்ஆட்சியை ஊரும் உலகமும் மெச்சும் அளவிற்கு வழங்கிவரும் அவரின் மைந்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்திட எல்லோரும் வாழ்த்துவோம்.