வேளச்சேரி அருகே கஞ்சா விற்றவர் கைது

வேளச்சேரி: சென்னை வேளச்சேரி அருகே சுண்ணாம்பு கொளத்தூர், விடுதலை நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒருவர் கஞ்சா விற்பதாக நேற்று பள்ளிகரணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது சந்தேக நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவரிடம் சிறுசிறு பொட்டலங்களாக 1.25 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (எ) சாமி (31) எனத் தெரியவந்தது.  

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: