முக்கிய செய்தி சென்னை கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்: கொரோனா சங்கிலியை உடைப்போம் : முதல்வர் ட்வீட் Jun 01, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொரோனா தொற்று தங்களை தாக்கமால் இருக்க ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ட்வீட்டரில் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். பொதுமக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் கொரோனா சங்கிலியை உடைத்தாலே தொற்றை கட்டுப்படுத்தி விடலாம். கடந்த மே 24 முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் படிப்படியாக தொற்று குறைந்துள்ளது. சென்னையில் 7 ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது 2,000-ஆக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னையில் கொரோனா தொற்று முழுமையாக குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கொரோனா தொற்று கடந்த வாரம் அதிகமாக இருந்தது. தொற்றை முழமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறினார். ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிப்படுவதை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மக்களை நோக்கி காய்கறி, மளிகை, பொட்கள் வந்து சேர ஏற்பாடு செய்துள்ளோம், ரேசன் கடைகள் திறந்துள்ளன என கூறினார். பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கூறினார். ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினர் பாதிப்பால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கி உள்ளோம் என கூறினார். விரைவில் எஞ்சிய ரூ.2000 கொடுக்கப்போகிறோம் என தெரிவித்தார்.
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம்
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து