சென்னை: கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள டிஎன்பிஎல் டவுன்சிப்-ல் உள்ள சமுதாய கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது. அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை.இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி மருத்துவமனைக்கு கிடைத்திட, சுமார் ரூ.1 கோடி செலவில், தேவையான உபகரணங்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து ஆக்சிஜன் வசதி கொண்டகொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- கரூர் மாவட்ட நிர்வாகம்
- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
- ஆக்ஸிஜன் வசதி
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்