திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விதிகளை மீறிய ஒரு மளிகைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரும் 7-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், திருக்கழுக்குன்றம் பகுதியில் கடந்த வாரம் ஒரு மளிகை கடை அரசு விதிகளை மீறி இயங்கி வந்ததாக தெரியவந்தது. இதேபோல் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனம், ஆயில் மில் ஆகிய 2 நிறுவனங்கள் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கியதாக திருக்கழுக்குன்றம் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.