மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது: வைகோ பாராட்டு

சென்னை: மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது என்று வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்ைக: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.  

மணிமேகலை காப்பியத்தில், கையில் அமுத சுரபியுடன் காணார், கேளார், பேசார் போன்ற ஆதரவற்றவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல, தமிழக அரசே அமுதசுரபியாக ஆகிவிட்டது. மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிருபித்துள்ளது. மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: