அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் மறைவு; தமிழக முதல்வர்,கனிமொழி எம்.பி. இரங்கல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பி.இ.சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தவர் என முதல்வர் கூறியுனார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு வருத்தமளிக்கிறது என்று கனிமொழி எம்.பி இரங்கல் தெரிவித்து உள்ளார். 

கல்வி என்பது சமூகத்தை மேம்படுத்தும் வழியாகவும், சமூக நீதிக்கான பாதையாகவும் இருக்க வலியுறுத்தியவர் என அவர் கூறியுள்ளார். கான்பூர் ஐஐடியின் தலைவராகவும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் (93) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related Stories: