கொல்கத்தா: மேற்கு வங்கத்தை உலுக்கிய நாரதா ஊழல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிர்ஹாத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி உள்ளிட்ட 4 பேரை கடந்த 17ம் தேதி சிபிஐ கைது செய்தது. வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் ஜாமீன் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.