இந்தியா புதிய ஐ.டி. விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள்!: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் கூட்டமைப்பு கடிதம்..!! May 28, 2021 UN PT செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கூட்டமைப்பு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் டெல்லி: மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் புதிய வசதிகள் மின்னணு செய்தி ஊடகங்களுக்கு பொருந்தும் என்பது இரண்டாயிரம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு என தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பணியாளர்களின் குறைகளை தீர்க்க குழுக்களை அமைக்க வேண்டும் என்பது போன்ற விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய விதியால் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி செலவு ஏற்படுவதுடன் மனித வளம் தேவையின்றி வீணடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய விதிகளில் இருந்து செய்தி தொலைக்காட்சிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக செய்தி தொலைக்காட்சி ஒழுங்குமுறை விதிகளை வலுப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் உள்ளது: காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து
உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க ஐசியூக்களில் மூளை இறப்புகளை கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு