புதுடெல்லி: தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான தகவல்களை பதிவிடுவோருக்கு, அதை பதிவிட்டமைக்காக எச்சரிக்கை செய்தி அனுப்பும் வழக்கம் பேஸ்புக்கில் இருக்கிறது. தற்போது இந்த எச்சரிக்கைக்கு அடுத்தபடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி, பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.