உலகம் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டு அதிபர், பிரதமர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..!! May 27, 2021 ஜனாதிபதி மாலி மாலி: ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர், பிரதமர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவம் ஆட்சியை கவிழ்த்தது. இதன் காரணமாக அதிபராக இருந்த இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சர்வதேச அழுத்தம் காரணமாக கடந்த செப்டம்பரில் இடைக்கால அதிபராக பாண்டவ்வோவும், பிரதமராக மோக்டார் அவுனேவும் பொறுப்பேற்றனர். இருப்பினும் முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் மாலி அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு ராணுவ அமைப்பில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், இடைக்கால அதிபர் பாண்டவ் மற்றும் பிரதமர் மோக்டார்ரை கைது செய்தது. மாலியில் ஏற்கெனவே தீவிரவாத கும்பல்கள், ராணுவ சண்டை, அரசியல் நெருக்கடி, வறுமை என பல பிரச்சினைகள் நீடிக்கின்றன. இதற்கிடையே ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த ஆலோசனையும் நடத்தாமல் அதிபரும், பிரதமரும் தன்னிச்சையாக செயல்பட்டதாக ராணுவம் குற்றம்சாட்டியது. இதையடுத்து மாலி அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்