இந்தியா மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி: ப.சிதம்பரம் ட்வீட் May 26, 2021 பி. சிதம்பரம் டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவடைந்துள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்வதுதான் போராட்டத்திற்கான தீர்வின் முதல்படி எனவும் பதிவிட்டுள்ளார். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது என கூறினார். மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி என குறிப்பிட்டார். வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் உள்ளது: காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து
உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க ஐசியூக்களில் மூளை இறப்புகளை கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு