இந்தியா மேற்கு வங்க வன்முறை!: சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம்..!! May 25, 2021 மேற்கு வங்கம் உச்ச நீதிமன்றம் டெல்லி: மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடந்தது. ஏராளமான வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் மத்திய குழு ஆய்வு செய்தது. இந்நிலையில் மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்.வி.ரமணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை அரசியல் சாசனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த வன்முறை குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
இனி உற்பத்தி, விநியோகம் இல்லை கோவிஷீல்டு தடுப்பூசியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது: அஸ்ட்ராஜெனகா திடீர் அறிவிப்பு
அரியானா அரசியலில் பரபரப்பு மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் வலியுறுத்த காங். முடிவு
ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் திடீர் ரத்து: கடைசி நிமிடத்தில் கூறியதால் பயணிகள் தவிப்பு
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு