முக்கிய செய்தி இந்தியா தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான், மாநிலங்களுக்கு தடுப்பூசி நேரடி சப்ளை இல்லை: மார்டனா நிறுவனம் அறிவிப்பு May 24, 2021 இந்திய அரசு மார்த்தனா சண்டிகார் : தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான் என்றும், மாநிலங்களுக்கு தடுப்பூசி நேரடி சப்ளை இல்லை என்று அமெரிக்க மருந்து நிறுவனமான மார்டனா தெரிவித்துள்ளது. 18 - 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நாடி உள்ளன.இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், தங்களது மாடர்னா தடுப்பூசியை நேரடியாக பஞ்சாப் மாநில அரசுக்கு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டது. மாடர்னா நிறுவனத்தின் கொள்கைப்படி இந்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தை கையாள முடியுமே தவிர மாநிலங்களுடனோ, தனியார் துறையினருடனோ கையாள முடியாது என பஞ்சாப் மாநில அரசின் தொடர்பு அதிகாரி விகாஸ் கார்க் தெரிவித்தார்.
4ம் கட்ட மக்களவை தேர்தல்; 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: அகிலேஷ் யாதவ் உள்பட 1,717 வேட்பாளர்கள் போட்டி
96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்; ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு: 26,550 துணை ராணுவத்தினர் உள்பட 1 லட்சம் பேர் குவிப்பு
நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய உறுப்பினர்களுக்கு 30 சதவீதம் பயிர்க்கடன்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை
மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜ வென்றால் அமித்ஷா தான் பிரதமர்: கெஜ்ரிவாலின் அதிரடி பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு
4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,710 பேரில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு: 476 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேரிடம் சொத்து இல்லை