நாகை : நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் கொ ரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன் தொடங்கி வைத்தார். நாகை தாசில்தார் ஜெயபாலன், டிஎஸ்பி சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஆரூர் நாடக கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.