மங்களூரு அருகே கரையில் மோதிய மீன்பிடி படகு: கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்கள் உள்பட 10 பேர் மீட்பு

மங்களூரு: மங்களூரு உல்லால் கடற்கரையில் எதிர்ப்பாராதவிதமாக மீன்பிடி படகு மோதி  விபத்துக்குள்ளானது. இதில் இருந்த 10 மீனவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர்.   கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியை சேர்ந்த அஷ்ரப் மற்றும்  பாரூக் ஆகியோருக்கு சொந்தமான படகில் மீனவர் சிலர் மீன்பிடிக்க கடலுக்கு  சென்றனர். இந்நிலையில், அவர்கள் சென்ற படகு நேற்று முன்தினம் நள்ளிரவு  எதிர்பாராதவிதமாக உல்லால் அருகே கோடி கடற்கரைக்கு வேகமாக வந்து மோதியது மணலில் சிக்கிக் கொண்டது. இதனால்  தத்தளித்து கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்கள் உள்பட 10  மீனவர்களை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். ஆழ்கடலில் படகை கேப்டன்  வேறொருவரிடம் ஒப்படைத்ததே விபத்துக்கு காரணம் என்று போலீசார்  சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக உல்லால் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர்.

Related Stories: