பார்மா: இத்தாலியின் பார்மா நகரில் எமிலியா ரோமாக்னா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தது. முதல் அரையிறுதியில், 3ம் நிலை வீராங்கனையான 17 வயது அமெரிக்காவின் கோகா காப், 25 வயதான செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை கோகா காப் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் வீறு கொண்டு எழுந்த சினியகோவா 6-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சுதாரித்து ஆடிய கோகா காப் 6-2 என கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.