முக்கிய செய்தி இந்தியா சீன தொழிலதிபரை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி!: ஆசியாவிலேயே 2வது இடம்.. வானை முட்டும் சொத்து மதிப்பு..!! May 21, 2021 க ut தம் அதானி ஆசியா டெல்லி: கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு போன்றவற்றால் இந்தியா 2 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக தவித்து வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி ஆசியாவின் 2வது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக அறியப்படும் கெளதம் அதானி, கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன் வர்த்தகத்தை பன்மடங்கு விரிவாக்கம் செய்துள்ளார். இதனால் பங்கு சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி, துறைமுக வர்த்தகம் என பல துறைகளிலும் இவரது சொத்து மதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் அவரது சொத்து மதிப்பு 4 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதானி டோட்டல் கேஸ் பங்கு 1145 விழுக்காடும், அதானி எண்டர் பிரைசிஸ் பங்கு 827 விழுக்காடும், அதானி டிரான்ஸ்மிஷன் 617 விழுக்காடும் உயர்ந்துள்ளது. அத்துடன் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 433 விழுக்காடும், அதானி பவர் நிறுவனம் 189 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த அபார வளர்ச்சியால் சீனா பணக்காரரான ஸோங் ஷான்ஷான் - ஐ முந்தி ஆசியாவின் 2வது பெரிய பணக்காரராக அதானி உருவெடுத்துள்ளார். 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம்
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து