முக்கிய செய்தி சென்னை தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்குங்கள்!: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!! May 21, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆர் பாலு சென்னை: தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வரும் 24ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் செய்வதறியாது திணறி வருகின்றன. ஆம்புலன்ஸிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலமும் நீடித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். கொரோனாவின் தாக்கம் உயர்வதால் கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்குங்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு அருகே இருக்கக்கூடிய ஆலையில் 300 கோடி முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பு பணியை தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்திருக்கிறார். ஏற்கனவே தமிழகத்திற்கு ஆக்சிஜன் அளவீட்டை அதிகரிக்க வேண்டும் என அவர் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம்
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!