மறுஉத்தரவு வரும்வரை விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையிலிருந்து சேலம், மைசூர், கடப்பா, ராஜமுந்திரி, கோவா, கண்ணூர், கர்னூல், ராஞ்சி, சிலிகுரி ஆகிய சிறிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் கூட்டம் இல்லாத சிறிய விமான நிலையங்களான சேலம், மைசூர், கடப்பா, கர்னூல், கண்ணூர், கோவா, ராஞ்சி, சிலிகுரி உட்பட பல்வேறு சிறிய விமான நிலையங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அனைத்து விமான சேவைகளும்  நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து முக்கியமான விமான நிலையங்களுக்கு 30 விமானங்கள் மட்டுமே புறப்பட்டு சென்றன. இந்த 30 விமானங்களிலும் 1,200 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.  அதைப்போல் இந்த 30 விமானங்களும் சென்னைக்கு திரும்பிவருகின்றன. அதில் 900 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். சிகாகோவிலிருந்து டில்லி வழியாக சென்னை வரும் விமானத்தில் 6 பயணிகள் மட்டுமே வருகின்றனர்….

The post மறுஉத்தரவு வரும்வரை விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: