சென்னை: வண்டலூர் பகுதியில் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த பார்மசி ஊழியர் விஷ்ணுகுமாரை தனிப்படை போலீசார் சமீபத்தில் கைது செய்து, அவரிடமிருந்து 7 ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தனர். இவர் அளித்த தகவலையடுத்து கோவில்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்து விசாரித்த போது பெங்களூருவில் மொத்த வியாபார கடையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி ரூ.3000 விஷ்ணுவிடம் விற்பதாகவும், விஷ்ணு சென்னையில் ரூ.20 ஆயிரம் வரை மருந்தை விற்பனை செய்து வருவதாகவும் கூறினார். மேலும் சண்முகம் அளித்த தகவலையடுத்து நெல்லை, மதுரை ஆகிய இடங்களிலும் அந்தந்த மாவட்ட போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.