சூரத்: டிக்டாக் போன்ற சமூக வலைதளத்திற்காக கயிறை வைத்து சாகசம் செய்ய முயன்ற சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டதில் பரிதாபமாக பலியானான். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் டிக்டாக் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்துள்ளான். இதனால் பாடுவது, ஆடுவது, பல்வேறு சாகசங்கள் செய்வது என வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொண்டிருந்தான். நேற்று முன்தினம் மாலையில் அவனது பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். வீடு திரும்பியபோது கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு மயக்கமாகிக் கிடந்துள்ளான். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.