சென்னை: டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஏராளமான வீரர்களை உருவாக்கிய முன்னாள் தேசிய சாம்பியன் சந்திரசேகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். சென்னையில் வசித்தவர் வேணுகோபால் சந்திரசேகர்(63). டேபிள் டென்னிஸ் வீரரான அவர் 3 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும் யுஎஸ்.சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்திருக்கிறார். இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி தன்னை கவுரவித்துக் கொண்டது. எஸ்.ராமன், ஜி.சத்யன், ஆர்.எஸ்.ராஜா, வி.சீனிவாசன் என ஏராளமான வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார். சந்திரசேகர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவுமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.