நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சில்வாரியாவில் இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன் மூலம் 2,300 டன், கோழித்தீவனத்திற்கு பயன்படும் பச்சரிசி தவிடு மூட்டைகள் நேற்று நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்தது. இங்கிருந்து 110 சரக்கு லாரிகள் மூலம் தவிடு மூட்டைகளை தொழிலாளர்கள் ஏற்றி கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைத்தனர்.