நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடந்தது. இதில் ஜெயலட்சுமி என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது, ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயலட்சுமி 1179 வாக்குகள் பெற்றிருந்தார். வெற்றி பெற்றவர் ஜெயலட்சுமி என அறிவிப்பதற்கு பதிலாக தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினர்.