டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெல்லி தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் முன் வர வேண்டும் என கூறினார். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. ஆகையால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.