புழல்: சென்னை கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வினோத் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த ஜனவரி 7ம் தேதி அதிகாலையில் சென்னை மூலக்கடையில் இருந்தபோது 2 நபர்கள் தாம்பரம் செல்ல வேண்டும் எனக் கேட்டு ஆட்டோவில் பயணம் செய்தனர். புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே சென்றபோது ஆட்டோவில் வந்த 2 மர்ம ஆசாமிகளும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவர் வினோத் வைத்திருந்த செல்போன், ரூ. 5000 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தாக்கிபின்னர், ஆட்டோவை எடுத்து கொண்டு தப்பி னர். இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார்.