திண்டுக்கல்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (68). மனைவி பிரபாவதி. 5 மகள்கள், அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பாக்கியநாதன் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் வந்த இவர், ஜடாமுடியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சித்தராக வலம் வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வெள்ளை விநாயகர் கோயில் அருகே, கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பாக்கியநாதன் எழுந்திருக்க முடியாமல் படுத்தபடியே கிடந்தார்.