தமிழகம் வனப்பகுதியில் பெய்த கனமழை!: கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை ஒரே இரவில் நிரம்பியது..!! May 07, 2021 கிருட்டிப்பள்ளம் அணை Kopi ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஒரே இரவில் நிரம்பியது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வருகிறது. இந்த அணை 42 அடி உயரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் வினோபா நகரில் கட்டப்பட்டது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் வினோபா நகர், ரோன்கர் பாளையம் உள்ளிட்ட 10த்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த அணை, தற்போது ஒரே இரவில் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 1980ல் அணை கட்டப்பட்ட பின்னர் இன்று வரை 40 ஆண்டுகளாக அணை தூர்வாரப்படவில்லை என்றும் அதனால் அணையில் 10 அடி உயரத்திற்கு சேறும், சகதியுமாக படிந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து அணையை தூர்வாருவதற்கு பதில் அதிகாரிகள் 1.89 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத் தளமாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்
திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் 10 வயது சிறுமி மாடு முட்டி படுகாயம்: பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை பின்பற்றப்படுகிறதா?: நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. மணிமுத்தாறு அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்!!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்..!!