தமிழகம் தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.2 கோடி வசூல்!: கொரோனா விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை..!! May 07, 2021 தஞ்சாவூர் தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய நாளில் இருந்து முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் இடையில் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தற்போது கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்தும் அதனை மீறி நடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் தான் அதிக அளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் மீது 1 லட்சத்து 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 80,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில், கட்டுப்பாட்டை மீறி நேற்று மாலை 5 மணி வரை செயல்பட்ட 5 கடைகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு