சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு, சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. மருத்துவ கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். நுரையீரல் தொற்று எந்தளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் 1,500 ரூபாயில் தொடங்கி 8 ஆயிரம் ரூபாய் வரை விதவிதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு 3 ஆயிரம் ரூபாய் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.