மும்பை: 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கி மும்பை, தற்போது அகமதாபாத், புதுடெல்லி ஆகிய நகரங்களில் நடந்து வந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டு வந்தது. வீரர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 24 நாட்களில் 29 லீக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வேறு வழியின்றி ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் ஒத்திவைக்க முடிவெடித்துள்ளது.