ஊட்டி: மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை செங்குத்தான மலை மற்றும் மலை சரிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரையில் உள்ள சாலை மிகவும் குறுகலாகவும், அதேசமயம் அதிகளவு வளைவுகளை கொண்டதாகவும் இருக்கும். தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின், இச்சாலையை சீரமைக்கும் மற்றும் விரிவுப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், இச்சாலை விரிவுப்படுத்துவதில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சிக்கலும் ஏற்பட்டது.இருப்பினும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இல்லாத தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தற்போது சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தது வருகிறது.