சென்னை 'மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்தவர்'!: டிராபிக் ராமசாமி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..!! May 05, 2021 உதயநிதி ஸ்டாலின் டிராபிக் ராமசாமி சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தொடுத்து பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் டிராபிக் ராமசாமி. 87 வயதான இவர், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை இவரது உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில், வெண்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாலை 7:45 மணியளவில் ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக-வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிராபிக் ராமசாமி உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்தவர் டிராபிக் ராமசாமி எனவும் அவரது இறப்பு வேதனை தருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநரை சந்திக்க சென்றிருப்பதால் இங்கு வர இயலவில்லை என குறிப்பிட்ட உதயநிதி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்படி திமுக தலைவர் கூறியதாகவும் தெரிவித்தார். டிராபிக் ராமசாமி அவர்களுக்கு என்ன செய்யப்பட வேண்டுமோ அதனை திமுக தரப்பில் செய்து தரப்படும் என்றும் உதயநிதி உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து டிராபிக் ராமசாமியின் உடலானது கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்ய கொண்டு செல்லப்படவுள்ளது.
தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: மோடி, அமித் ஷாவுக்கு சரத் பவார் கண்டனம்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை
ஹெல்மெட் அணிந்து வந்து தனியாக செல்லும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு: தனியார் நிறுவன ஊழியர் கைது
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்
சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்
நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்: 2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு