ரூ.3.6 கோடி சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை ரேஸ் கிளப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சென்னை ரேஸ் கிளப்க்கு, ரூ.3.60 கோடி சொத்து வரி செலுத்தக்கூறி, மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய சொத்துவரி நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ.5 லட்சத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். 1998 முதல் 2018 வரையிலான ரூ.3.60 கோடி சொத்துவரியை செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப்க்கு சென்னை மாநகராட்சி கடந்த 2020-ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது

The post ரூ.3.6 கோடி சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை ரேஸ் கிளப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: