இந்தியா ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்!: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 2 பேர் பலி..!! May 04, 2021 பெங்களூர் பெங்களூரு: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகர் தொழில்நுட்பத்தில் தேசிய தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு நகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர். பெங்களூரு நகர் எலகங்கா என்ற பகுதியில் உள்ளது அர்கா தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நேற்று காலை வரை 45 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை முதல் தங்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இன்று காலையில் 14 சிலிண்டர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர். அரசிடம் தாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தங்களுக்கு செவி சாய்க்கவில்லை. ஆதலால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரில் நேற்று அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம்
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தகவல்
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
ஆபாச வீடியோ விவகாரம் : பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்
தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்