சென்னை மக்களே உஷார்!: வெப்பம் உமிழும் கத்திரி வெயில் ஆரம்பம்..அடுத்த 25 நாட்கள் அனல் தெறிக்கும் வெயிலுக்கு வாய்ப்பு..!! May 04, 2021 Ushar சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கவுள்ள நிலையில், வழக்கத்தை விட இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஆண்டுதோறும் தமிழ்மாத கணக்கீட்டின் படி, சித்திரை மாத பிற்பகுதியில் தொடங்கி வைகாசி மாதம் முதல் பாதி வரையில் கத்திரி வெயில் காலமாக கருதப்படுகிறது. அதன்படி இன்று தொடங்கவுள்ள கத்திரி வெயில் அடுத்த 25 நாட்களுக்கு அதாவது மே 29 வரை நீடிக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இந்த கத்திரி வெயில் காலத்தில் மேலும் வெயிலின் தாக்கமும் வெப்பமும் அதிகரிக்கும். இந்த வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர் வற்றி போகும் என்பதால் நண்பகலில் வெயிலில் சுற்றுவதை குறைத்துக் கொள்வதுடன் உடலில் நீர் சத்தை அதிகரிக்கும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டை பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில் தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதியில் இருக்கும் மக்கள் தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும்.
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்
சித்திரை மாத பிரமோற்சவ விழா திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி